தனுஷ் என் தம்பி என்பதை மறக்கணும்: செல்வராகவன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காயிதம் படம் அமேசான் பிரைமில் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

படத்தை பார்த்தவர்கள் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷை பாராட்டுகிறார்கள். இந்நிலையில் நடிப்பு மற்றும் தனுஷ் பற்றி செல்வராகவன் கூறியதாவது,

தனுஷுக்கு ஆரம்பத்தில் நடிப்பை கற்றுக் கொடுத்தேன். ஆனால் அதன் பிறகு அவரின் கடின உழைப்பால் முன்னேறினார். செட்டுக்கு வந்துவிட்டால் தனுஷ் ஒரு நடிகர், நான் இயக்குநர்.

அதனால் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வராது. நான் சொல்வதை அப்படியே கேட்பார். தனுஷ் இரண்டு முறை தேசிய விருது வாங்கியிருப்பதால் தற்போது என் பொறுப்பு அதிகம். ஹாலிவுட்டுக்கு வேறு சென்றுவிட்டார். அதனால் அத்தகைய நடிகரை கையாள, அவர் என் தம்பி இல்லை என்பதை நான் மறக்க வேண்டும்.

அவர் நிறைய சாதித்திருக்கிறார் என்று அடிக்கடி எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வேன்.

இயக்குநர் ஆக வேண்டும் என்பது ஒரு இரவில் எடுத்த முடிவு இல்லை. முதலில் இசை பக்கம் தான் சென்றேன். அது ஒர்க்அவுட் ஆகவில்லை. அதன் பிறகே படம் இயக்க வந்தேன்.

கல்லூரியில் என்ஜினியரிங் படித்தேன். அது நமக்கு சரிபட்டு வராது என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “தனுஷ் என் தம்பி என்பதை மறக்கணும்: செல்வராகவன்

  1. Pingback: 86kub
  2. Pingback: junk search engine
  3. Pingback: Science

Comments are closed.