• இந்திய தேசிய ஒலிம்பியாட் போட்டியில் ஆகாஷ் பள்ளி 125 பேரைத் தகுதிபெறச் செய்துள்ள நிலையில், 29 மாணவர்கள் இறுதி தேசிய தேர்வு முகாமுக்கு முன்னேறியுள்ளனர்.
மார்ச் 25, 2026: ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), இந்திய தேசிய ஒலிம்பியாட் (INO) திட்டத்தில் மீண்டும் ஒருமுறை தனது சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு அறிவியல் பிரிவுகளில் 29 மாணவர்கள் மதிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் தேர்வு முகாம் (OCSC) 2026-க்குத் தகுதி பெற்றுள்ளனர்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தால் (HBCSE) நடத்தப்படும் OCSC தேர்வானது, பல்வேறு சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தச் செல்லும் மாணவர்களுக்கான தேசியத் தேர்வுச் செயல்முறையின் இறுதிக் கட்டமாகும்.
வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் இளநிலை அறிவியல் உள்ளிட்ட முக்கிய அறிவியல் பாடங்களில் AESL மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, இளம் மாணவர்களிடையே அறிவியல் நாட்டத்தையும் பகுப்பாய்வுச் சிந்தனையையும் வளர்ப்பதில் இந்நிறுவனம் கொண்டுள்ள கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பாடவாரியான தகுதித் தேர்வு முடிவுகள் பின்வருமாறு:
• வானியல் – அ: 4
• வானியல் – பி: 3
• உயிரியல் – அ: 8
• உயிரியல் – பி: 6
• வேதியியல் – அ: 3
• வேதியியல் – பி: 0
• இயற்பியல் – அ: 1
• இயற்பியல் – பி: 1
• இளநிலை அறிவியல்: 1
• IMOTC: 2
OCSC 2026-க்குத் தகுதி பெற்ற மொத்த மாணவர்கள்: 2 9
தேசிய ஒலிம்பியாட் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, உயிரியல் அறிவியல் ஆசிரியர்கள் சங்கம், இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து இந்தத் தேர்வை நடத்துகிறது.
பள்ளி மாணவர்களிடையே உள்ள சிறந்த அறிவியல் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கல்வித் தளங்களில் ஒன்றாக இந்திய தேசிய ஒலிம்பியாட் திட்டம் பரவலாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்வு செயல்முறையானது, தேசிய தரநிலைத் தேர்வுகளில் (NSEs) தொடங்கி, இந்திய தேசிய ஒலிம்பியாட் (INO) நிலை வரை பல கடுமையான கட்டங்களைக் கொண்டுள்ளது. தகுதிபெறும் மாணவர்கள் OCSC- க்கு அழைக்கப்படுகிறார்கள். அங்கு, உலகளாவிய ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இறுதி அணிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் தீவிரப் பயிற்சி, கோட்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் ஆய்வகச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
தனது கல்விச் சூழலமைப்பின் வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில், ஆகாஷ் நிறுவனம் 2025-26 கல்வியாண்டில் இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் மற்றும் இளநிலை அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் INO கட்டத்தில் மொத்தம் 125 மாணவர்களின் தகுதிகளைப் பதிவு செய்துள்ளது. தற்போது OCSC கட்டத்திற்கு முன்னேறியுள்ள 29 மாணவர்கள், இந்தியாவின் சர்வதேச ஒலிம்பியாட் அணிகளில் இடம்பிடிப்பதற்காகப் போட்டியிடும் அடுத்த தொகுதியினராக உள்ளனர்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. சந்திர சேகர் கரிசா ரெட்டி கூறியதாவது: இந்திய தேசிய ஒலிம்பியாட் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான மிகவும் கடினமான மற்றும் அறிவுசார் சவால்கள் நிறைந்த கல்விப் பயணங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது பாட அறிவை மட்டுமல்லாமல், கருத்து ஆழம், பகுப்பாய்வுச் சிந்தனை மற்றும் அறிவியல் சிக்கல்களைத் தனித்துவத்துடன் அணுகும் திறன் ஆகியவற்றையும் சோதிக்கிறது. இந்த ஆண்டு வழிகாட்டுதல் மற்றும் தேர்வு முகாமுக்கு முன்னேறியுள்ள எங்கள் மாணவர்களையும், 2025-26 ஆம் ஆண்டுக்கான INO கட்டத்திற்குத் தகுதி பெற்ற 125 ஆகாஷ் மாணவர்களையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
ஆகாஷில், எங்கள் கவனம் தேர்வுத் தயாரிப்பையும் தாண்டிச் செல்கிறது. கருத்துகளில் ஒரு வலுவான அடித்தளம், கட்டமைக்கப்பட்ட கல்வி வழிகாட்டுதல், மற்றும் உலகளாவிய ஒலிம்பியாட் தரநிலைகளைப் பிரதிபலிக்கும் சவாலான சிக்கல் கட்டமைப்புகளுக்கு அவர்களை உட்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், அறிவியல் ஆர்வத்தையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களையும் வளர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். இது போன்ற சாதனைகள், உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றல் கொண்ட இளம் அறிவியல் மனங்களை வளர்ப்பதில் எங்கள் மாணவர்களின் அர்ப்பணிப்பையும், எங்கள் ஆசிரியர்களின் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கின்றன. இந்த மதிப்புமிக்க பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் எங்கள் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விச் சிறப்பில் ஒரு வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஆகாஷ் நிறுவனம், பொறியியல், மருத்துவம் மற்றும் ஒலிம்பியாட் திட்டங்கள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் உலகளாவிய கல்விப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது. தனது கடுமையான கல்விப் பாடத்திட்டம், கட்டமைக்கப்பட்ட தேர்வு முறைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் எதிர்கால விஞ்ஞானிகள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் உறுதியாக உள்ளது.
About Aakash Educational Services Limited (AESL)
Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company specialising in providing comprehensive and effective preparation services for students preparing for high-stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE), as well as competitive exams such as NTSE and Olympiads.
AESL has a pan-India network of over 415 centres with 400,000+ currently enrolled students and has established a strong market position over the past 37 years. The company follows a student-centric approach supported by experienced faculty, technology-enabled learning platforms, and structured academic programmes designed to help students unlock their full potential.




















