நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ராஜ்கிரண் சூர்யாவுடன் கடைசியாக நந்தா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















18 thoughts on “20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் பிரபல நடிகர்”
Comments are closed.