குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரேணிகுண்டா, அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று, துல்கர் சல்மானின் உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.
பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் பரோட்டா கடையில் வேலை செய்து வந்தார். மேலும் கொரோனா வைரஸ் பிரச்சனையால் லாக்டவுன் அமலுக்கு வந்த நேரத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகக் கூறி வீடியோ வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன்.
அவருக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை கொடுத்து உதவினார் விஷால். மேலும் கவிஞர் சினேகனும் அவருக்கு உதவி செய்தார்.
இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் இருக்கும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
அவரின் மரணம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை
— R.Seenu Ramasamy (@seenuramasamy) March 22, 2021
இதய அஞ்சலி கணேசா.. pic.twitter.com/TWQIHHgElt
எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.. என தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமியின் ட்வீட்டை பார்த்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, தீப்பெட்டி கணேசனுக்கு என்ன ஆனது சார் என்று கேட்டுள்ளனர். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
முன்னதாக அவர் அஜித்திடன் உதவி கோரியிருந்தார். பேட்டி ஒன்றில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது,
என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் என்னை தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். கார்த்திக் என என் பெயரை சொல்லி அழைத்த ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன்.
அவரை ஒருமுறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவரை மட்டும் சந்தித்துவிட்டால் என் பிள்ளைகளின் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
என்னை பற்றி தெரிய வந்தாலே அஜித் சாரே கூப்பிடுவார். ஆனால் அவரிடம் இந்த விஷயத்தை யாரும் கொண்டு சேர்க்கவில்லை என்றார்.
தீப்பெட்டி கணேசனுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















10 thoughts on “நடிகர் தீப்பெட்டி கணேசன் மறைவு”
Comments are closed.