தமிழகத்தில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வந்தன. மே 21ஆம் தேதி யாரும் எதிர்பார்த்திராத வகையில் புதிய உச்சமாக 36,184 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புதிய பாதிப்புகள் தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் பாதிப்புகளை விட 300 முதல் 400 வரை எண்ணிக்கையில் குறைவாக பதிவாகி வந்தது.
மீண்டும் அதிகரித்த பாதிப்புகள்
இந்நிலையில் நேற்று முன்தினம் 4,512 என்ற அளவில் இருந்த புதிய பாதிப்புகள், நேற்று 4,506ஆக காணப்பட்டது. அதாவது வித்தியாசம் வெறும் 6 என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதன்மூலம் மொத்த பாதிப்புகள் 24,79,696ஆக அதிகரித்துள்ளது. நேற்று 5,537 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தமாக குணமடைந்தவர்கள் 24,08,886ஆக அதிகரித்துள்ளனர். புதிதாக 113 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் 32,619ஆக அதிகரித்துள்ளது. தற்போது 38,191 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 51 பேர் உயிரிழப்பு !
ஜூலை 5ஆம் தேதி என்ன நடக்கும்?
இந்நிலையில் நேற்று எதிர்பாராத வகையில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்திருப்பது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. இது ஊரடங்கு கட்டுப்பாடுகளை சரியான பின்பற்றப்படாததன் விளைவே என்று கருதப்படுகிறது. இதேநிலை வரும் நாட்களில் நீடித்தால் ஜூலை 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஊரடங்கில் தளர்வுகளுக்கு பதிலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தபடி, பாதிப்புகள் அதிகரித்தால் கடும் ஊரடங்கு அமலானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவிட்-19 மூன்றாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அது இரண்டாவது அலையை விட மிக மோசமாக இருக்கலாம் என்றும், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் இருவேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்த சூழலில் மூன்றாவது அலை வராமல் தவிர்க்கும் வகையில் தமிழக மக்கள் நடந்து கொள்வதே சரி என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.
~ நன்றி சமயம்



















13 thoughts on “தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு? கலங்க வைக்கும் களநிலவரம்!”
Comments are closed.