நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘மாமன்’ திரைப்படம் மே16ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.

எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8443131791950614&output=html&h=360&adk=1995718353&adf=448229670&pi=t.aa~a.2521432847~i.17~rp.4&w=360&abgtt=9&lmt=1746763125&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1291757872&ad_type=text_image&format=360×360&url=https%3A%2F%2Fmoviewingz.com%2Fmaaman-3%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=263&rw=315&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTUuMC4wIiwiIiwiQ1BIMjU3NyIsIjEzNi4wLjcxMDMuNjAiLG51bGwsMSxudWxsLCIiLFtbIkNocm9taXVtIiwiMTM2LjAuNzEwMy42MCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEzNi4wLjcxMDMuNjAiXSxbIk5vdC5BL0JyYW5kIiwiOTkuMC4wLjAiXV0sMF0.&dt=1746763125215&bpp=15&bdt=4192&idt=-M&shv=r20250507&mjsv=m202505060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De5ad2f38b980d4f9%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Ma4djGYgbnT2ZaP06RRoopkNIReoA&gpic=UID%3D000010b9b458230d%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Mb0rp7YAvbMm1sD7NFjFaqKP36q_w&eo_id_str=ID%3D30436453bd0f2df3%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DAA-AfjYEqRX51xReRX8TcZpK_N9g&prev_fmts=0x0%2C360x360&nras=3&correlator=5399607547892&frm=20&pv=1&u_tz=330&u_his=5&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=0&ady=2517&biw=360&bih=664&scr_x=0&scr_y=364&eid=31092114%2C95358862%2C95358864%2C31092197%2C95358621%2C31092319%2C95359272%2C95356798&oid=2&pvsid=5751225546121124&tmod=1077820907&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fmoviewingz.com%2Fcategory%2Fkollywood-tamil-news%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C665%2C360%2C664&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsW251bGwsbnVsbCxudWxsLCJkZXByZWNhdGVkX2thbm9uIl0sbnVsbCwzXQ..&nt=1&pgls=CAEaBTYuNy4y~CAEQBBoHMS4xNDQuMA..&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&dtd=241

இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்,…

மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8443131791950614&output=html&h=360&adk=1995718353&adf=2044001531&pi=t.aa~a.2521432847~i.27~rp.4&w=360&abgtt=9&lmt=1746763125&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1291757872&ad_type=text_image&format=360×360&url=https%3A%2F%2Fmoviewingz.com%2Fmaaman-3%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=263&rw=315&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTUuMC4wIiwiIiwiQ1BIMjU3NyIsIjEzNi4wLjcxMDMuNjAiLG51bGwsMSxudWxsLCIiLFtbIkNocm9taXVtIiwiMTM2LjAuNzEwMy42MCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEzNi4wLjcxMDMuNjAiXSxbIk5vdC5BL0JyYW5kIiwiOTkuMC4wLjAiXV0sMF0.&dt=1746763125215&bpp=16&bdt=4191&idt=16&shv=r20250507&mjsv=m202505060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De5ad2f38b980d4f9%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Ma4djGYgbnT2ZaP06RRoopkNIReoA&gpic=UID%3D000010b9b458230d%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Mb0rp7YAvbMm1sD7NFjFaqKP36q_w&eo_id_str=ID%3D30436453bd0f2df3%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DAA-AfjYEqRX51xReRX8TcZpK_N9g&prev_fmts=0x0%2C360x360%2C360x360&nras=4&correlator=5399607547892&frm=20&pv=1&u_tz=330&u_his=5&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=0&ady=4898&biw=360&bih=664&scr_x=0&scr_y=364&eid=31092114%2C95358862%2C95358864%2C31092197%2C95358621%2C31092319%2C95359272%2C95356798&oid=2&pvsid=5751225546121124&tmod=1077820907&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fmoviewingz.com%2Fcategory%2Fkollywood-tamil-news%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C665%2C360%2C664&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsW251bGwsbnVsbCxudWxsLCJkZXByZWNhdGVkX2thbm9uIl0sbnVsbCwzXQ..&nt=1&pgls=CAEaBTYuNy4y~CAEQBBoHMS4xNDQuMA..&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&dtd=536

‘ விலங்கு ‘என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.‌

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ‘ இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ‘ என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.

இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.

எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

சூரியும், நானும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன்.

இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

சிறுத்தை சிவா பேசுகையில், ” சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன்.‌ மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சூரி சார் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.

நடிகை சுவாசிகா பேசுகையில்,…

படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர்.

இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும் ,கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8443131791950614&output=html&h=360&adk=1995718353&adf=1450573106&pi=t.aa~a.2521432847~i.47~rp.4&w=360&abgtt=9&lmt=1746763186&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1291757872&ad_type=text_image&format=360×360&url=https%3A%2F%2Fmoviewingz.com%2Fmaaman-3%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=263&rw=315&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTUuMC4wIiwiIiwiQ1BIMjU3NyIsIjEzNi4wLjcxMDMuNjAiLG51bGwsMSxudWxsLCIiLFtbIkNocm9taXVtIiwiMTM2LjAuNzEwMy42MCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEzNi4wLjcxMDMuNjAiXSxbIk5vdC5BL0JyYW5kIiwiOTkuMC4wLjAiXV0sMF0.&dt=1746763125263&bpp=11&bdt=4239&idt=12&shv=r20250507&mjsv=m202505060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De5ad2f38b980d4f9%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Ma4djGYgbnT2ZaP06RRoopkNIReoA&gpic=UID%3D000010b9b458230d%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DALNI_Mb0rp7YAvbMm1sD7NFjFaqKP36q_w&eo_id_str=ID%3D30436453bd0f2df3%3AT%3D1746763044%3ART%3D1746763044%3AS%3DAA-AfjYEqRX51xReRX8TcZpK_N9g&prev_fmts=0x0%2C360x360%2C360x360%2C360x360&nras=5&correlator=5399607547892&frm=20&pv=1&u_tz=330&u_his=5&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=0&ady=7896&biw=360&bih=664&scr_x=0&scr_y=3051&eid=31092114%2C95358862%2C95358864%2C31092197%2C95358621%2C31092319%2C95359272%2C95356798&oid=2&pvsid=5751225546121124&tmod=1077820907&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fmoviewingz.com%2Fcategory%2Fkollywood-tamil-news%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C721%2C360%2C720&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsW251bGwsbnVsbCxudWxsLCJkZXByZWNhdGVkX2thbm9uIl0sbnVsbCwzXQ..&nt=1&pgls=CAEaBTYuNy4y~CAEQBBoHMS4xNDQuMA..&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&dtd=61402

படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ லப்பர் பந்து ‘படத்திற்குப் பிறகு ‘ மாமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Author: ADmiNIstRAtoR