தமிழகத்தில், தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், நில நிர்வாக ஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத் துறை இயக்குனராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, சமூக நலத் துறை இயக்குனராகவும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குனராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கூட்டுறவுத் துறை பதிவாளராகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், பதிவுத் துறை ஐ.ஜி.,யாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக லக்ஷ்மி ப்ரியாவும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதாவும், சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குனராக சுதனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 thoughts on “தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்!”
Comments are closed.